Pages

Wednesday, April 25, 2012

“பழச்சாறு குடித்தால் புற்றுநோய் ஏற்படும்” ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தகவல்


தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு உகந்தது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


அதில், பழச்சாறு சாப்பிடு பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதில் உள்ள சர்க்கரை புற்றுநோயை உருவாக்குவது கண்டறியப்பட்டது. குறிப்பாக, டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைக்கப்படும் பழச்சாறுகளில் அவை கெட்டுப்போகாமல் இருக்க பல மூலப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவை குடல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நாள் ஒன்றுக்கு 3 டம்ளருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இது போன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment