Pages

Saturday, April 28, 2012

பால், தயிரில் உயிருள்ள பாக்டீரியா…


* “ப்ரோ பயோட்டிக்’ உணவுகளில் உயிருள்ள பாக்டீரியா இருக்கின் றன; உடலுக்கு நல்லது செய்யும் இந்த பாக்டீரியாவுடன் “ப்ரோபயோட்டிக்’ உணவு பாக்கெட் களை தயாரிக்கும் நிறுவனங்கள் 2005ல் இருந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன.

* அமுல், நெஸ்ட்லே, மதர் டெய்ரி, பிரிட்டானியா போன்ற நிறுவனங் கள், இந்த வகை பால், தயிர் பாக் கெட்களை விற்பனை செய்து வருகின்றன.
* “ப்ரோ பயோட்டிக்’ சுவையூட்டப் பட்ட பால், தயிர், யோகர்ட் போன்றவை அருந்துவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
* இந்த உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு ஆசிட், கொலஸ்ட்ரால் நீக்கப்பட்ட துணைப்பொருட் களும் சேர்க்கப்படுகின்றன.
* கடந்த 2007ல் 120 கோடி ரூபாய் அளவுக்கு இந்த வர்த்தகம் இருந்தது. ஆண்டுக்கு 40 சதவீதம் அதிகரித்து வருகிறது.
* ப்ரோ பயோட்டிக் உணவுகள் அதிகமாக உட்கொண்டால், குடலை பாதிக்கச் செய்யும் அளவுக்கு நிலைமை போகும். குடல் செயலிழக்கும் அபாயமும் உண்டு.
* மாத்திரை வடிவிலும் “ப்ரோ பயோட்டிக்’ சத்து கிடைக்கிறது. வெளிநாடுகளில் இந்த வகை மாத்திரைகள் விற்கப்படுகின்றன.
* நான்காண்டாக இது தொடர்பான சர்ச்சை நீடித்துக்கொண்டிருக்க, முதன் முறையாக அரசு உறுதியான கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வர உள்ளது.
* நூறாண்டுக்கு முன், இலியா இலியாச் மெக்னிகோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி தான் முதன் முதலில் இந்த பாக்டீரியாவை கண்டுபிடித்தார்.
* இந்த 21ம் நூற்றாண்டில், குறைந்த கொழுப்பு, முழு சத்தான, ஆன்டிபயாடிக் உள்ள “சூப்பர் புட்’ என்ற பெயரில் “ப்ரோ பயோட்டிக்’ உணவுகள் வந்துள்ளன.
* 1920ல், தயிர், பால் பொருட்களில் இந்த வகை பாக்டீரியா இருப்பது தெரிந்து, உடலுக்கு நல்லது என்று கண்டறிந்து உண்டு வந்தனர்.
* “ப்ரோ பயோட்டிக்’ என்பது கிரேக்க வாசகம்; வாழ்வதற்காக என்று பொருள்.
* செறிவூட்டப்படாத ஓட்ஸ், கோதுமை தானியங்கள், வாழைப் பழம், தக்காளி, கீரை வகைகள் ஆகியவற்றிலும் இந்த வகை பாக்டீரியாக்கள் உண்டு.

No comments:

Post a Comment