Pages

Friday, April 20, 2012

இஞ்சியின் மருத்துவ குணம்


*இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

*இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் இது  குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. மேலும் இது  கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.


*மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிதளவு  உப்பு சேர்த்து குடித்தால் குணமாகும்.

*பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையல் அறைத்து சாப்பிடு வந்தால்  நன்கு பசி எடுக்கும்.

*ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் விரைவில் குணமாகும்.

*பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்படுவதுண்டு அதற்கு சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிடு வந்தால் குணமாகும்.

இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடல் உபாதைகள் வராது.

No comments:

Post a Comment