Pages

Thursday, April 19, 2012

மாதுளையின் மருத்துவ குணம்


புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் மூன்று வகையான மாதுளை உண்டு .

குடல் அழற்சியை போக்கும் சக்தி புளிப்பு மாதுளைக்கு உண்டு. இது, உணவு செரிமானத்தை துரிதப்படுத்தும். மேலும், குடலில்
உருவாகும் இயல்பான மாற்றங்களையும் சரிசெய்யும் ஆற்றல் புளிப்புமாதுளைக்கு உண்டு.


இனிப்பு மாதுளை, உடல் சூட்டைத் தணித்து, ரத்த விருத்தியைப் பெருக்கும். அதுமட்டுமல்லாம, உடல் பலவீனத்தைப் போக்கி, தெம்பு கொடுக்கும்.

மாதுளையோட பூ, பழம், விதை, பட்டைன்னு எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றது . வைட்டமின் 'சி' மற்றும் 'பி' இதில் அதிகமா இருக்கிறது . மேலும், இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் வேதிப்பொருட்களும் நிறைய இருக்கிறது . ஜ×ரத்தோட சேர்ந்து வர்ற வாந்தி, மயக்கம், நாக்குல நீர் சுரக்குறது போன்ற பிரச்சினைகளுக்கு மாதுளை ஜுஸ் சிறந்த மருந்து. ஆனால், எப்போதும் போல இதை ஜுஸ் போடக்கூடாது. மாதுளை முத்துக்களை ஒரு மெலிசான துணியில போட்டுப் பிசையணும். பிறகு துணியைப் பிழிஞ்சா, சாறு வரும். அதுல கற்கண்டைப் பொடிசெய்து போட்டு கலக்கி குடிச்சா, வாந்தியும் நிற்கும்; நாக்குல நீர் சுரக்குற தொந்தரவும் இருக்காது

No comments:

Post a Comment